
சென்னை: இந்து தமிழ் திசை நாளிதழின் மாயாபஜார் பகுதிக்கு 9-ம் வகுப்பு மாணவன் எழுதிய பாராட்டு கடிதத்தை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்து தமிழ் திசை நாளிதழில் வரும் வார இணைப்பு இதழான மாயாபஜாரில் ஒரு கடிதம் எழுதுகிறேன் எனும் பகுதியுள்ளது. இதில் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் நணபர்கள் குறித்து மாணவர்கள் எழுதிய சிறந்த கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.