சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. இதை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கிவைத்தார்.

அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை, பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு சேர்க்கை, அரசு பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கை ஆகியவற்றுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படுகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் (2025-2026) அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆன்லைன் விண்ணப்ப பதிவை தொடங்கி வைத்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *