
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது. இதன் பிறகு இந்திய ராணுவப் படைகள் மிகுந்த விழிப்புடன் உள்ளன.
இந்தியாவின் முன்னேற்பாடுகளை கண்டு, பாகிஸ்தானில் அச்சம் அதிகரித்துள்ளது. இருநாடுகள் இடையே போர் ஏற்பட்டால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் பாகிஸ்தான் உள்ளது. இதற்கு பாகிஸ்தானிடம் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளுக்கு பெரும் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுகிறது.