
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ வான்வழி தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் 4 உதவியாளர்கள் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ்-இ-முகம்மது தலைவர் மவுலானா மசூத் அசார் தெரிவித்துள்ளார்.
மசூத் அசார் வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கையில், பஹவான்பூரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் சுபஹான் அல்லா ஜெய்ஷ்-இ-முகம்மது தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அசாரின் அக்கா, அவரது கணவர், மருமகன் அவரது மனைவி, மருமகள் மற்றும் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.