கோவை: ஈஷா அறக்கட்டளை தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றே எரிவாயு தகன மேடையை கட்டியுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை ஆட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈஷாவை சுற்றியுள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் பொது மக்களின் பயன்பாட்டுக்காக எரிவாயு தகன மேடையை ஈஷா அறக்கட்டளை கட்டியது. பொது மக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட தகன மேடையை செயல்படாமல் முடக்கும் நோக்கில், முறையாக அனுமதி பெறாமல் தகன மேடை கட்டப்பட்டு உள்ளது எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *