சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேஆர்பி அணை கட்டுவதற்காக, வனப்பகுதி கிராமங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேஆர்பி அணை கட்டும்போது வனப்பகுதி கிராமங்களான கொத்துப்பள்ளி, கொட்டாவூர் கிராம மக்களை அதிகாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அங்கு வசித்தவர்கள் சூலகிரி தாலுகாவில் உள்ள துரிஞ்சிப்பட்டி மற்றும் கோட்டையூர் கிராமத்தில் குடியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் கொண்ட இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது எனக் கூறி அங்கிருந்து வெளியேறும்படி வனத்துறையினர் பொதுமக்களை நிர்பந்தம் செய்ததை எதிர்த்து அந்த கிராமங்களைச் சேர்ந்த 272 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *