
சென்னை: மாணவர்களின் உயரை குடிக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்க அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
அன்புமணி: நீட் தேர்வில் வெற்றிபெற முடியுமா என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரை சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.