
புதுடெல்லி: நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்து இல்லை என அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி கூறியுள்ளார். சனாதன ஆதரவாளர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக, ராகுல் கோயில்களுக்குள் நுழைவதற்கும் தடை விதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
வட மாநிலங்களின் சர்ச்சை துறவியாகக் கருதப்படுபவர் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி. இவர், உத்தரகாண்ட் மாநிலம் ஜோதிஷ்வர் பீடத்தின் சங்கராச்சாரியராகவும் கருதப்படுகிறார். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரையும் விமர்சித்துள்ளார். இதனால், அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, ஒரு சர்ச்சை துறவி எனவும் பெயர் எடுத்தவர்.