
கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் சொன்னாலும் சொன்னார் எல்லாக் கட்சிகளும் இப்போது இதை முக்கிய அஜென்டாவாக வைக்கத் தொடங்கிவிட்டன.
திமுக கூட்டணிக்குள் சலசலப்பை உண்டாக்க வேண்டும் அங்கிருக்கும் கட்சிகளுக்கும் சபலத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே கட்சியின் முதல் மாநாட்டிலேயே போகிற போக்கில் ‘அதிகாரத்தில் பங்கு’ என்று கொளுத்திப் போட்டார் விஜய். அது இப்போது நன்றாகவே பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது.