சென்னை: அரசி​யலமைப்பு சட்​டத்தை அழிக்க துடிக்​கும் பாஜக அரசை எதிர்க்​கும் வழியை இந்​திய மக்​களுக்கு தமிழகம் காட்டியிருக்​கிறது என அகில இந்​திய காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தெரி​வித்​தார். தமிழக காங்​கிரஸ் கட்சி சார்​பில் ‘அரசி​யலமைப்பை காப்​பாற்​று​வோம்’ என்ற தலைப்​பில் அரசி​யல் மாநாடு சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள காங்​கிரஸ் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது.

கட்​சி​யின் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை மாநாட்​டுக்கு தலைமை வகித்​து, ‘இந்​திய அரசி​யலமைப்​பு’ புத்​தகத்தை காங்​கிரஸ் நிர்​வாகி​களுக்கு வழங்கினார். ‘ஒரு​மித்த குரலோடு, ஒற்​றுமை​யான கைகளோடு இந்​திய தேசத்தை பாது​காப்​போம்’ என்று உறு​தி​மொழி எடுத்​துக்​கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *