
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 42,718 பேருக்கு வெளிப்படைத் தன்மையுடன் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) சார்பில் தேசிய அளவிலான மருத்துவ கல்வி மாநாடு சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநாட்டை தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.