
சென்னை: மாநில உரிமைகளை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே அனுமதியளித்து, முக்கிய தீர்ப்பை வழங்கியது.