மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் – மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (மே 1) பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமானது.

பவானி ஆற்றங்கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வாழை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மேற்கண்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறுமுகை பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட பகுதிகளில் நேந்திரன், செவ்வாழை, ரோபஸ்டா, கதிலி என பல்வேறு வகையிலான வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படுகின்ற வாழைத்தார் ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *