
சென்னை: இந்திய இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மனைவியும், தயா பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனருமான லதா ரஜினிகாந்த், பக்தி சேவா சமயம் அக்ரிபிட் அமைப்புடன் இணைந்து பாரத சேவா மற்றும் சங்கல்பம் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார்.
திட்டத்தின் தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு காணொளி மூலமாக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.