சென்னை: காமராஜர் துறைமுகத்திலிருந்து எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரியை கொண்டு செல்வதற்காக ரூ.197 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாட்டை மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நிலக்கரி முனையம் 3-ல், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை கொண்டு செல்லும் வகையில் கூடுதலாக 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள் தமிழக மின்வாரியத்தின் மூலம் ரூ.197 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாட்டை மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *