
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலால் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள பொதுமக்களை வேறு இடங்களுக்கு மாற்றியதாக தெரிகிறது. ஏனெனில், ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானின் எல்லையில் பல மசூதிகள் உள்ளன. அங்கு 5 வேளை தொழுகைக்கு முன்பு பாங்கு ஒலிக்கப்படும். அந்த ஒலி இந்திய எல்லைகளிலும் கேட்பதுண்டு.