
ராமேசுவரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆவணங்ளை அவருடைய குடும்பத்தினர் தேசிய ஆவணக் காப்பத்தில் ஒப்படைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் ஏழை மீனவக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், சிறந்த விஞ்ஞானியாகத் திகழ்ந்ததோடு மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்படும் குடியரசுத் தலைவராகவும் விளங்கினார்.