
சென்னை: காவல் ஆணையரின் கோரிக்கையை ஏற்று, வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் போலீஸார் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் 4 ஆயிரம் போலீஸார் பயனடைய உள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் போலீஸார் தங்குவதற்கு சுமார் 4 ஆயிரம் குடியிருப்புகள் தேவைப்பட்டது. ஆனால், காவலர் குடியிருப்புகளில் வீடுகள் காலியாக இல்லை.