• April 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: “புதிய மின்இணைப்புகள் உட்பட அனைத்து சேவைகளுக்கும் மின்வாரிய இணையதளம் மூலமாகவே எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் மென்பொருளை உருவாக்க வேண்டும்” என, மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மின்விநியோகம் செய்யும் பணியை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. இதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன், மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் அண்மையில் ஆய்வு நடத்தினர். அதில், ஆணையம் மின்வாரியத்துக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி, புதிய மின்இணைப்புகள் உட்பட அனைத்து சேவைகளுக்கும் மின்வாரிய இணையதளம் மூலமாகவே விண்ணப்பங்களை பெற வேண்டும். எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் மென்பொருளை உருவாக்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *