
சென்னை: சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சென்னையில் 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: “மின்சார வாகனங்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப அவற்றுக்கான பொது சார்ஜிங் நிலையங்கள் மிகவும் குறைவாக உள்ளன. மேலும், மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கி.மீ. தூரத்துக்கும் ஒரு சார்ஜிங் நிலையங்களும் நகர்ப்புறங்களில் 3 கி.மீ. தூரத்துக்கு ஒரு நிலையமும் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.