• April 30, 2025
  • NewsEditor
  • 0

இப்போதைக்கு சாக்குப் போக்குச் சொன்னாலும் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி சேருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் இரண்டு கட்சிகளுக்குள்ளும் புது உற்சாகம் பீரிட்டு அடிக்கிறது. “வரட்டும் பார்க்கலாம்” என விட்டேத்தியாய் இருந்தவர்கள் எல்லாம் இப்போது தங்களுக்கான தொகுதிகளுக்கு துண்டு போட்டு இடம் பிடிக்கப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

2021 தேர்தலில், விழுப்​புரம் மாவட்​டத்தில் உள்ள 7 தொகுதி​களில் 4 தொகுதிகளை திமுக-​வும், 2 தொகுதிகளை அதிமுக-வும் வென்றன. ஒரே ஒரு தொகுதியை மட்டும் பாமக கைப்பற்​றியது. இம்முறை திமுக 4 தொகுதிகளை தனக்கு வைத்துக் கொண்டு 3 தொகுதிகளை கூட்ட​ணிக்கு ஒதுக்​கலாம் என்கி​றார்கள். தான் போட்டி​யிடும் நான்கு தொகுதி​களுக்கும் திமுக வலுவான வேட்பாளர்களை கைவசம் வைத்திருக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *