• April 29, 2025
  • NewsEditor
  • 0

‘UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து கோவையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.

‘UPSC/TNPSC குரூப் -1, 2 – தேர்வுகளில் வெல்வது எப்படி?’ என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மே 11 ஆம் தேதி கோவையில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

UPSC / TNPSC குரூப் தேர்வுகளில் வெல்வது எப்படி? இலவச பயிற்சி முகாம்

இந்த நிகழ்வில் Dr.v சசி மோகன் IPS (DIG Coimbatore) திரு. சிவகுரு பிராபகரன் IAS (Coimbatore Corporation Commissioner) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த தங்களுடைய அனுபவங்களையும் ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்கள்.

இவர்களுடன் King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதனும் சிறப்புரை ஆற்றுகிறார். ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

UPSC / TNPSC குரூப் தேர்வுகளில் வெல்வது எப்படி? இலவச பயிற்சி முகாம்
UPSC / TNPSC குரூப் தேர்வுகளில் வெல்வது எப்படி? இலவச பயிற்சி முகாம்

இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

Loading…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *