• April 29, 2025
  • NewsEditor
  • 0

அறிவியல் சார்ந்த நில வரைபட அடிப்படையில் தீயணைப்பு நிலையங்கள் அமைப்பது, சொத்து வரி நிலுவையை தாமதமாக செலுத்துவதற்கான வட்டி விகிதத்தை குறைப்பது உள்ளிட்டவை தொடர்பாக சட்டப்பேரவையில் 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சட்டப்பேரவையில் நேற்று 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் விவரம்: தீ தடுப்புக்கான செயல்பாட்டு நேரத்தை குறைக்க, அறிவியல் சார் நில வரைபடம் அடிப்படையில் புதிய இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று கடந்த 2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, தீயணைப்பு துறை சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *