
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய 10 மணி முதல் 12 மணி நேரம் வரை ஆகிறது. பக்தர்களின் கூட்டத்தை கவனத்தில் கொண்டு, வரும் மே 1-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது எனவும் நேரில் வரும் விஐபி பக்தர்களுக்கு வழக்கம்போல் விஐபி பிரேக் தரிசனம் அமல்படுத்தப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்த விஐபி பிரேக் தரிசனத்தை வெள்ளோட்டமாக மே 1 முதல் காலை 6 மணிக்கு அனுமதிக்கலாம் எனவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.