
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து ஷோயப் அக்தரின் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்.
தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள 16 யூடியூப் சேனல்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 63 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். டான் நியூஸ், சாமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், சுனோ நியூஸ், ஜியோ நியோ உள்ளிட்ட பாகிஸ்தான் நாட்டு ஊடக நிறுவனங்களின் யூடியூப் சேனல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.