• April 28, 2025
  • NewsEditor
  • 0

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு.

பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்திலிருந்து 19 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்துக்கும், கிரிக்கெட்டர் அஷ்வினுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

பெருமிதத்துடன் கிரிக்கெட் வீரர் அஷ்வினின் குடும்பம்

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்திருக்கும் இந்திய சுழற்பந்துவீச்சாளர் கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரனுக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்பட்டது.

கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செய்த நடிகர் அஜித் குமார் குடும்பத்துடன் சென்று பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *