
சென்னை: வணிக உரிமம் புதுப்பிப்பதற்கான அவகாசத்தை மே 31-ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டிருப்பதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வணிக உரிம கட்டணங்கள் 2025-26 ஆண்டுக்கு பெருமளவு உயர்த்தப்பட்டது. அதனால் வணிகர்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எடுத்துச் சென்றது.