
அலைச்சறுக்கு வீரரான சிவா, சென்னையில் உணவகம் ஒன்றில் வேலை பார்க்கிறார். ஒரு நாள் கடற்கரையில் ராட்சத உருவத்தில் மயங்கி கிடக்கும் சுமோ தஷிரோவை (யொஷினோரோ தஷிரோ) சிவா மீட்கிறார். பார்ப்பதற்கு வெளிநாட்டவரைப் போல் இருக்கும் அவரை, உணவகத்துக்கு அழைத்து வருகிறார். பழைய ஞாபகங்களை இழந்து விடும் அவரை ஒரு குழந்தையைப் போல் பார்த்துக் கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் அவர் ஜப்பானில் மிகப்பெரிய சுமோ விளையாட்டு சாம்பியன் என்பது தெரிய வருகிறது. அவரை மீண்டும் ஜப்பானுக்கு அழைத்துச் செல்ல, சிவா திட்டமிடுகிறார். ஆனால், ஜப்பானில் இருக்கும் ஒரு கும்பல் அவரை ஜப்பானுக்கு வர விடாமல் தடுக்கிறது. அவரை, சிவாவால் ஜப்பானுக்கு அழைத்து செல்ல முடிந்ததா, இல்லையா ? என்பது கதை.