
டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் நேற்று காலை வேகமாக சென்ற சரக்கு வேன் மோதியதில் துப்புரவு பெண் தொழிலாளிகள் 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர்.
டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் நூ ஹரியானா என்ற இடத்தில் பிரோஷ்பூர் ஜிர்கா பகுதி அருகே சரக்கு வேன் ஒன்று நேற்று காலை 10 மணியளவில் அதிவேகமாக வந்தது. கட்டுப்பாட்டை இழந்த வேன் விரைவுச்சாலையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது மோதியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர், மற்ற 5 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள மாண்டி கேரா மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.