
இஸ்ரோ முன்னாள் தலைவரும் தேசிய கல்விக் கொள்கையின் தலைவருமான கிருஷ்ணசாமி கஸ்தூரி ரங்கன் (84) பெங்களூருவில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கடந்த 1940-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி பிறந்த கிருஷ்ணசாமி கஸ்தூரி ரங்கன் சிறந்த விஞ்ஞானியாகவும், கல்வியாளராகவும் சூழலியல் ஆர்வலராகவும் விளங்கினார். இஸ்ரோவி்ல் 40 ஆண்டுகள் பணியாற்றிய இவர் 1994-ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை இஸ்ரோவின் தலைவராகப் பதவி வகித்தார். இவர் பொறுப்பு வகித்த காலக்கட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.