
தீவிரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் தீர்மானங்களுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி அளித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற 26 அப்பாவி மக்களை தீவிரவாதிகள் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் எழுப்பி உள்ளது. நாடு முழுவதும் இதற்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.