
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயன்தாரா உடன் மோதல் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி விளக்கமளித்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இதன் படப்பிடிப்பில் சுந்தர்.சி – நயன்தாரா இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக இருவருமே விளக்கம் அளிக்காமல் இருந்தனர். தற்போது ‘கேங்கர்ஸ்’ படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், இந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார்.