• April 25, 2025
  • NewsEditor
  • 0

கோவை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

நகர சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், நுண்ணுயிரியலாலர், ஆய்வகநுட்புநர், பல்நோக்கு மருத்துவப்பணியாளர் ஆகிய பணிகள்.

இது 6 மாதங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையிலான பணி ஆகும்.

மொத்த காலிபணியிடங்கள்: நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 32, நகர பொது சுகாதார ஆய்வகங்களில் 3.

வயது வரம்பு: ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடுகிறது.

சம்பளம்: ரூ.8,500 – ரூ.40,000

கல்வி தகுதி: ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடுகிறது.

என்னென்ன பணிகள், எந்தப் பணிக்கு எத்தனை காலிபணியிடங்கள், மாத ஊதியம் எவ்வளவு, தகுதிகள் என்னென்ன என்பதை கீழே தெரிந்துகொள்ளுங்கள்.

பணி சம்பந்தமான விவரங்கள்

இதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, “மாநகர நல அலுவலர், பொது சுகாதாரப்பிரிவு, மாநகராட்சி பிரதான அலுவலகம் (டவுன்ஹால்), கோயம்புத்தூர் மாநகராட்சி, 1109, பெரிய கடை வீதி, கோயம்புத்தூர் – 641001” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் அல்லது இந்த முகவரிக்கு நேரில் சென்று கொடுக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30, 2025.

மேலும், விவரங்களை இங்கே கிளிக் செய்யவும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *