
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டுள்ளது என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறினார். பிஹார் மாநிலம், மதுபானியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் நிதிஷ் குமார் பேசுகையில், “பஹல்காமில் நடந்த தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது கொடூர செயலை நாம் அனைவரும் கண்டித்து வருகிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டுள்ளது” என்றார்.
நிதிஷ் குமார் மேலும் பேசுகையில், “எதிர்க்கட்சியினருடன் சேர்ந்ததன் மூலம் கடந்த காலங்களில் தவறு செய்து விட்டேன். இனி தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு செல்ல மாட்டேன்.