
சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட விசாக்கள், மேலும் பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழலில் பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதன்படி ஏப்ரல் 27-ம் தேதிக்குள் அனைத்து பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. மருத்துவ விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ள பாகிஸ்தானியருக்கு மட்டும் ஏப்ரல் 29-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.