
மதுரை: தமிழகத்தில் நேரடி உதவி காவல் ஆய்வாளர்கள் பணிக்கான கல்வித் தகுதி கட்டுப்பாடுகளை நீக்கக் கோரிய வழக்கில், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை வண்டியூரைச் சேர்ந்த கோபால், இப்ராஹிம் கலிபுல்லா, சுரேஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 1,299 உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஏப்.4-ம் தேதி வெளியிட்டது.