
தஞ்சாவூர்: தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நேற்று ஏசி இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் தற்போது மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப் பகுதி, கண் சிகிச்சை பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இந்த மருத்துவமனைக்கு தஞ்சாவூர் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து கணிசமான அளவில் பெண்கள் மகப்பேறு சிகிச்சைக்கு வருகின்றனர்.