
சென்னை: காஷ்மீரில் இருந்து 118 தமிழக பயணிகள் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர். அப்போது, ‘அப்பாவி மக்களைக் கொன்ற தீவிரவாதிகளை நடுரோட்டில் நிற்க வைத்துச் சுட வேண்டும்’ என ஆவேசமாக அவர்கள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நிகழ்த்தியதில் 27 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 145 சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்கும் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.