• April 24, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், கஸ்தூரிபா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவருமான கவுசல்யாதேவி (95) வியாழக்கிழமை வயது மூப்புகாரணமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள கஸ்தூரிபா மருத்துவமனையில் 1969-ம் ஆண்டு முதல் மகப்பேறு நல மருத்துவராக பணிபுரிந்தவர் டாக்டர் கவுசல்யாதேவி.
காந்திகிராம அறக்கட்டளை வாழ்நாள் நிர்வாக அறங்காவலராகவும் இருந்துள்ளார். காந்தியவாதியான இவர், எளிமையான வாழ்க்கையை இறுதிவரை வாழ்ந்தார். சுற்றுப்புற கிராம மக்களின் நம்பிக்கையை பெற்றதால், இவரிடம் பிரசவம் பார்க்க வந்தவர்கள் அதிகம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *