
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், கஸ்தூரிபா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவருமான கவுசல்யாதேவி (95) வியாழக்கிழமை வயது மூப்புகாரணமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள கஸ்தூரிபா மருத்துவமனையில் 1969-ம் ஆண்டு முதல் மகப்பேறு நல மருத்துவராக பணிபுரிந்தவர் டாக்டர் கவுசல்யாதேவி.
காந்திகிராம அறக்கட்டளை வாழ்நாள் நிர்வாக அறங்காவலராகவும் இருந்துள்ளார். காந்தியவாதியான இவர், எளிமையான வாழ்க்கையை இறுதிவரை வாழ்ந்தார். சுற்றுப்புற கிராம மக்களின் நம்பிக்கையை பெற்றதால், இவரிடம் பிரசவம் பார்க்க வந்தவர்கள் அதிகம்.