
ஸ்ரீநகர்: காஷ்மீர் மக்களை எதிரிகளாக கருத வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் ஏப்.22-ம் தேதி நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு நாடுமுழுவதும் துக்கம் கடைபிடிக்கப்பட்டும், எதிராக போராட்டமும் நடந்து வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் உறுதுணையாக தெரிவித்துள்ளவர், இந்தச் சம்பவத்துக்காக காஷ்மீர் மக்களை குற்றம்சாட்டவேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுள்ளார்.