
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமாரின் தங்கைக்கு மாநகராட்சி தற்காலிக பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை மேயர் இந்திராணி, ஆணையர் சித்ரா பயனாளிக்கு வழங்கினார்.
நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் நவீன்குமார் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் மாநகராட்சி அதிமுக எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதைய மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.