• April 24, 2025
  • NewsEditor
  • 0

ஜம்மு காஷ்மீரின் பஹால்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில் ஒன்றாக அட்டாரி – வாகா எல்லையை முடியிருக்கிறது.

அட்டாரி – வாகா எல்லை பற்றி…

இந்தியா மற்றும் பாகிஸ்தானை பிரிப்பது இந்த எல்லை தான்.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஒரே அனுமதிக்கப்பட்ட சாலை வழி வர்த்தக பாதை இது. இதனால், இந்த எல்லை சுங்கம் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளது.

சுற்றுலா ரீதியாகவும் இந்த எல்லை மிக முக்கியமானது. தினமும் மாலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்படும் கொடியிறக்கம் நிகழ்வை பார்க்க பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.

அட்டாரி – வாகா எல்லை

ரூ.3,000 கோடி வர்த்தகம்

இது தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஒரே சாலை வழி வணிக பாதை என்பதால் இந்த எல்லை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால், பாகிஸ்தான் மிகுந்த பாதிப்பை சந்திக்க உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சமீபத்திய ஆண்டுகளில் குறைவாகவே உள்ளது, என்றாலும் இந்த மூடல் நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய ஏற்றுமதிகளுக்கு இந்திய சந்தையை நம்பியிருப்பதால் பாகிஸ்தான் இதில் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்கிறார்கள். ஏற்கனவே அந்நாடு பொருளாதார சிக்கலில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கைப்படி, 2023 – 24 ஆண்டில் இந்த வணிகப் பாதை வழியாக ரூ.3,886.53 கோடி வர்த்தகம் நடந்துள்ளது மற்றும் 71,563 பயணிகள் பயணித்துள்ளனர்.

இந்தியாவிற்கு என்ன பாதிப்பு?

இந்த எல்லை வழியே ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா காய்கறிகள், சோயா பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் உலர் பழங்கள், பாறை உப்பு, சிமென்ட் போன்றவை இந்த வழி வழியாகத் தான் வருகிறது. இந்த வழியே தான் ஆப்கானிஸ்தானில் இருந்தும், இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும்.

இந்த எல்லை மூடுதலால் சிறு வியாபாரிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிப்படைவார்கள்.

இந்தியா ஆப்கானிஸ்தான் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கு விரைவில் வேறு வழி கண்டுபிடிக்க வேண்டும்.

பாகிஸ்தான் உடனான வர்த்தகத்திற்கு மாற்றாக வேறு நாடுகளை வர்த்தகத்திற்கு தேட வேண்டும். அப்போது இந்த வர்த்தக நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும்.

தொடர் பிரச்னைகள் காரணங்களினால் 2018 – 19 காலக்கட்டத்தில் இருந்து குறைந்து வந்த இந்த வணிகம் இப்போது முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது.

சுற்றுலாவிற்கு பாதிப்பா?

கொடியிறக்க நிகழ்வு குறித்து இன்னும் எந்தத் தகவல்களும் சொல்லப்படவில்லை. எனினும் இன்று அந்நிகழ்வுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *