
‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றி தொடர்பாக கங்கை அமரன் கருத்துக்கு பிரேம்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது பாடல்கள் உபயோகப்படுத்தி இருப்பது தொடர்பாக தயாரிப்பாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இது தொடர்பாக பேசும் போது கங்கை அமரன், “7 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இசையமைப்பாளர் உருவாக்கிய பாடல்களை விட, எங்களுடைய பாடல்களுக்கு தான் கைதட்டல்கள் அதிகமாக விழுகிறது. அது தான் வெற்றிக்கு காரணம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.