
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, திருநெல்வேலியில் இருந்து அக்.21, 22-ம் தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் (06156) புறப்பட்டு, அதேநாள் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டை வந்தடையும். மறுமார்க்கமாக, செங்கல்பட்டில் இருந்து அக்.21, 22-ம் ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.00 மணிக்கு சிறப்பு ரயில் (06155) புறப்பட்டு, அதேநாள் நள்ளிரவு 11.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.