• October 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிரதமரின் தானிய வேளாண் திட்​டம் மற்​றும் தற்​சார்பு பருப்பு உற்​பத்தி திட்​டம் என்ற இரு பெரிய வேளாண் திட்​டங்​களை ரூ. 34,440 மதிப்​பில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். ரூ.5,450 கோடி மதிப்​பில் கால்​நடை வளர்ப்​பு, மீன்​வளம் மற்​றும் உணவு பதப்​படுத்​துதல் திட்​டங்​களை​யும் அவர் தொடங்கி வைத்​தார்.

லோக்​நாயக் ஜெய்​பிர​காஷ் நாராயணின் பிறந்​த நாள் கொண்​டாட்​டத்தை முன்​னிட்​டு, டெல்​லி​யில் உள்ள இந்​திய வேளாண் ஆராய்ச்சி மையத்​தில் சிறப்பு வேளாண் திட்​டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். இது குறித்து பிரதமர் அலு​வல​கம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வேளாண் உற்​பத்​தியை அதி​கரிக்​க​வும், பயிர் வகை​களின் உற்​பத்​தியை விரி​வாக்​க​வும், நீடித்த மற்​றும் நிலை​யான வேளாண் முறை​களை பின்​பற்​ற​வும், பஞ்​சா​யத்து மற்​றும் வட்​டார அளவில் அறு​வடை செய்​யப்​படும் பயிர்​களை சேமிக்​க​வும், நீர்ப்​பாசன திட்​டங்​களை விரிவுபடுத்​த​வும், தேர்வு செய்​யப்​பட்ட 100 மாவட்​டங்​களில் நீண்ட கால மற்​றும் குறுகிய கால பயிர்​கடன் வசதி​கள் கிடைக்​க​வும் பிரதமரின் தானிய வேளாண் திட்​டம் ரூ.24,000 கோடி மதிப்​பில் தொடங்கி வைக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *