
புதுடெல்லி: பிரதமரின் தானிய வேளாண் திட்டம் மற்றும் தற்சார்பு பருப்பு உற்பத்தி திட்டம் என்ற இரு பெரிய வேளாண் திட்டங்களை ரூ. 34,440 மதிப்பில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். ரூ.5,450 கோடி மதிப்பில் கால்நடை வளர்ப்பு, மீன்வளம் மற்றும் உணவு பதப்படுத்துதல் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயணின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் சிறப்பு வேளாண் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், பயிர் வகைகளின் உற்பத்தியை விரிவாக்கவும், நீடித்த மற்றும் நிலையான வேளாண் முறைகளை பின்பற்றவும், பஞ்சாயத்து மற்றும் வட்டார அளவில் அறுவடை செய்யப்படும் பயிர்களை சேமிக்கவும், நீர்ப்பாசன திட்டங்களை விரிவுபடுத்தவும், தேர்வு செய்யப்பட்ட 100 மாவட்டங்களில் நீண்ட கால மற்றும் குறுகிய கால பயிர்கடன் வசதிகள் கிடைக்கவும் பிரதமரின் தானிய வேளாண் திட்டம் ரூ.24,000 கோடி மதிப்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.