
பத்தனம்திட்டா: கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகளின் தங்க கவசங்கள் கடந்த 2019-ல் செப்பனிடப்பட்டன. அப்போது அதிலிருந்து சுமார் 4 கிலோ தங்கம் மாயமானது பின்னர் தெரியவந்தது. இதுகுறித்து கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய தலைவர் பி.எஸ்.பிரசாந்த் நேற்று கூறியதாவது: தங்கம் மாயமான விவகாரத்தில் தேவஸ்வம் துணை ஆணையர் பி.முராரி பாபுவுக்கு எதிராக ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் இதற்கு முன் சபரிமலையில் டிடிபி நிர்வாக அதிகாரியாக இருந்துள்ளார். 9 அதிகாரிகளின் தவறுகளை விஜிலென்ஸ் கண்டறிந்துள்ளது. முராரி பாபு மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளோம். மற்ற அதிகாரிகள் மீதான நடவடிக்கை குறித்து அக்டோபர் 14-ம் தேதி நடைபெறும் டிடிபி கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.