
சென்னை: ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன், மதுரையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். சென்னையில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன்படி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி, மதுரையில் இன்று (அக்.12) தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார்.