• October 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்​கத்​துடன் நயி​னார் நாகேந்​திரன், மதுரை​யில் இன்று சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறார். சென்​னை​யில் பொதுக்​கூட்​டங்​கள் நடத்​த​வும் திட்​ட​மிட்​டுள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு இன்​னும் 6 மாதங்​களே உள்ள நிலை​யில், அனைத்​துக் கட்​சிகளும் தேர்​தல் பணி​களை முடுக்​கி​விட்​டுள்​ளன. அதன்​படி, அதி​முக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றுள்ள பாஜக​வும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை எதிர்​கொள்ள தீவிரம் காட்டி வரு​கிறது. இந்​நிலை​யில், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்​கத்​துடன் தமிழகம் முழு​வதும் நயி​னார் நாகேந்​திரன் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள இருக்​கிறார். அதன்​படி, மதுரை​யில் இன்று (அக்​.12) தனது முதல்​கட்ட சுற்​றுப்​பயணத்​தைத் தொடங்​கு​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *