
சென்னை: ‘திருமாவளவனின் சந்தேகம் நியாயமானது. திருமாவளவன் சென்ற கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல் துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும்’ என மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
கடந்த 7-ஆம் தேதி சென்னை உயர் நீதின்றம் அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று திரும்பியபோது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று திருமாவளவன் சென்ற காருக்கு குறுக்கே வந்துள்ளது. அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், அவரது வாகனத்தை நிறுத்திவிட்டு தகாராறு செய்யவே, இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.