
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
ஒடிசாவின் ஜலேஸ்வர் பகுதியைச் சேர்ந்த மாணவி, பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தின் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர், இரவு உணவு உட்கொள்வதற்காக தனது நண்பர் ஒருவருடன் வெளியே சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் அவர் பாலியல் வனகொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.