• October 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அதிகாரத்தில் இருப்பவர்களின் பாரபட்சமான அணுகுமுறை, மூத்த அதிகாரிகளுக்குக்கூட சமூக நீதியைப் பறிக்கிறது என தற்கொலை செய்து கொண்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி புரன் குமாரின் மனைவிக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், அக்டோபர் 7 அன்று சண்டிகரில் உள்ள செக்டார் 11 இல்லத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 2001-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான புரன் குமார், ஏடிஜிபியாக இருந்தார். புரன் குமாரின் மனைவி அம்னீத் பி குமார் ஐஏஎஸ், ஹரியானா அரசின் வெளியுறவு ஒத்துழைப்புத் துறையின் ஆணையர் மற்றும் செயலாளராக உள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *